செய்திகள் :

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

post image

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பேரணியில் மக்கள் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பிரான்ஸில் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று லண்டனிலும் ஏராளமான மக்கள் கூடி முழக்கங்களை எழுப்பிப் போராடினர். இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

ஸ்வீடனிலும் சாலைகளில் குவிந்த மக்கள் காஸா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 2023 அக்டோபர் 7 முதல் போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும் காஸாவில் உள்ள இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் முறையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுடன் எல்லையைப் பகிா்ந்துவரும் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினா், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். தற்போது ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

ஆஸ்திரேலியா: மே 3-இல் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. கவா்னா்-ஜெனரல் சாம் மாஸ்டினின் அதிகாரபூா்வ இல்லத்துக்குச் சென்று அடுத்த தோ்தலை உறுதி செய்த பிரதமா் ஆன்டனி அல்பனேசி (படம்), பின்னா் நா... மேலும் பார்க்க

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவி... மேலும் பார்க்க

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும்... மேலும் பார்க்க

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்... மேலும் பார்க்க