செய்திகள் :

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா

post image

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில்,

"திமுக என்பது தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களை தேச விரோதிபோல சித்தரிக்க முயற்சி நடக்கிறது.

பாஜகவினர் எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர். அவர்கள் மீது பழிபோடுவதுதான் பாஜகவினருக்கு வாடிக்கை. கடந்த கால ஆட்சிகளை ஒப்பிட்டு மட்டுமே பேசுகின்றனர். நேருவைப் போல ஒரு பிரதமர் யாரும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறிவிட்டால் சரியாகிவிடுமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

விதி 370 பிரிவைக் கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் சண்டை இருக்காது, துப்பாக்கிச் சத்தம் இருக்காது என்றெல்லாம் கூறினார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நாடுகள் ஒன்றுகூட பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை.

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் மத்திய அரசு அதை மறுக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்கக்கேடு. ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்படுகிறேன்.

தாக்குதல் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.

அமெரிக்க துணை அதிபர், இந்தியப் பிரதமரை அழைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறுகிறார். இது உங்களுக்கு வெட்கம் இல்லையா?

கார்கில் போரின்போது வாஜ்பாய் ஒரு விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கையை நாடளுமன்றத்தில் வழங்கினார். குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளையாவது பின்பற்றுங்கள். பஹல்காம் தாக்குதல் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

தாக்குதல் முடிந்துவிட்டதாக ஒரு அமைச்சரும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரும் கூறுகிறார். இதில் எது உண்மை?" என்று பேசியுள்ளார்.

DMK MP A. Raja speech in the debate on Operation Sindoor in the Lok Sabha

இதையும் படிக்க | நேருவை குறை சொல்லாதீர்கள்; மோடி என்ன கற்றுக்கொண்டார்? - கனிமொழி

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்ப... மேலும் பார்க்க

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ள... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க