செய்திகள் :

`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?

post image

அதிபர் ஆவதற்கு முன்பும் சரி... பிறகும் சரி... ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர படாதபாடுப்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆனால், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், புதினை பயமுறுத்த 'வரி' என்கிற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கிறார்?

நேற்று அவர், '50 நாள்களுக்குள், போரை நிறுத்துவதற்கான எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என்றால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். மேலும், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீதும் வரி விதிக்கப்படும்.

நான் வரியை பல விஷயங்களுக்காக பயன்படுத்தி உள்ளேன். அது போரை நிறுத்துவதில் சிறப்பாக பங்காற்றுகிறது" என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

பட்டியலில் இடம்பெறாத ரஷ்யா

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்த பரஸ்பர வரி பட்டியலில், முக்கால்வாசி உலக நாடுகளே இருக்க, ரஷ்யா மட்டும் 'மிஸ்' ஆகியிருந்தது.

ட்ரம்ப் புதினை சாஃப்டாகத் தான் கையாண்டு வந்தார். ஆனால், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் இப்போது வரை பிடியே கொடுக்கவில்லை.

அதனால், தற்போது புதினுக்கு ட்ரம்ப் 50 நாள்கள் காலக்கெடு கொடுத்துள்ளார். இதற்குள் புதின் எதாவது சாதகமான முடிவு எடுக்க வேண்டும்.

இந்தியாவிற்கு பிரச்னை

இல்லையென்றால், ரஷ்யா உடன் சேர்த்து, இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளும் பாதிக்கப்படும். காரணம், இந்த நாடுகள் ரஷ்யா உடன் வணிகம் செய்துகொண்டிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியப்போது, அதை முடிவுக்கு கொண்டு வர, மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதித்தது.

டொனால்டு ட்ரம்ப்

இதனால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, அதன் கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய தொடங்கியது.

ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால், இந்த இறக்குமதிகளுக்கு முற்றுப்புள்ளி உண்டாகலாம்.

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்... மேலும் பார்க்க

``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் ஆணைய... மேலும் பார்க்க

ஒமர் அப்துல்லா விவகாரம்: ``இது எந்த மாநில முதல்வருக்கும் நடக்கலாம்.." - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. அப்போது அவரைத் தடுத்த காவல்துறை அதிகாரிகள், அவரை நினைவிடத்துக்குள் செல்ல வி... மேலும் பார்க்க

Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனையும்..!

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்க... மேலும் பார்க்க

OPS: ``மதுரையில் மாநாடு; அங்கே ஒரு முக்கிய முடிவு!'' - என்ன சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.OPSஅதில் பேசிய ஓ.பி.எஸ், "அரசியல்ரீதியான கட்சிகளுக்... மேலும் பார்க்க

TVK Vijay: ``மதுரையில் மாநாடு நடத்த நினைக்கிறார்கள்; ஆனால்..'' - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

மதுரையில் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டம் முழுக்... மேலும் பார்க்க