செய்திகள் :

போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

post image

நாடு முழுவதும் 250 இடங்களில் புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் உள்ள விமானப் படை வீரர்கள், ராணுவ முகாம்களில் உள்ள வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைகள், மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

54 ஆண்டுகளுக்குப் பிறகு..

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் நடந்தபோது, போர்ப் பாதுகாப்பு ஒத்திகையை பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்தினர்.

இந்த நிலையில், 54 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

எங்கெல்லாம் போர்ப் பாதுகாப்பு ஒத்திகை?

பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒத்திகையின்போது என்ன நடக்கும்?

  • வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிக்கச்செய்வார்கள்.

  • ஒத்திகை நடைபெறும் இடங்களில் சைரன் ஒலிகளுடன் போர் விமானங்கள் வானில் வட்டமிடும்.

  • இரவு நேரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்போது, அப்பகுதிகளில் மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடக்கி மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.

  • தாக்குதலுக்குள்ளானால் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்து பாதுகாப்புப் படையினர் செயல்படுத்துவார்கள்.

  • மருத்துவமனைகளின் தயார்நிலை சரிபார்க்கப்படும்.

  • அனைத்து விமானப் படை தளங்களிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள போர் விமான தளங்களிலும் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்வார்கள்.

  • எல்லையோரப் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்களைப் பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று ஒத்திகை செய்யப்படும்.

  • இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து சோதனை செய்யப்படும்.

  • தாக்குதல் நடைபெற்றால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னதாகவே அப்பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இணைய சேவை முடக்கப்பட்டால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் போலிச் செய்திகளைக் கண்டு பதற்றமடையாமல், மற்றவர்களுக்கு பரப்பாமல் அரசின் வழிகாட்டுதலின்படி செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற இருவர் கங்கையில் மூழ்கி பலி!

ஐஐடியில் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற இரு இளைஞர்கள் கங்கையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே கங்கையில் க... மேலும் பார்க்க

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்கிற சந்தேகத்தை அவர் மீது எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.பஹல்காம் ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப்பின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

பஞ்சாப் மாநிலத்தின் 20 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களினால் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

தெலங்கானா: சத்தீஸ்கரின் 14 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த 14 மாவோயிஸ்டுகள் தெலங்கானா மாநில காவல் துறையினரிடம் சரண்டைந்துள்ளனர். தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுதெம் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான் பி.ரோஹித் ராஜுவின் முன்னி... மேலும் பார்க்க

பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை வி... மேலும் பார்க்க