செய்திகள் :

போலி என்கவுன்ட்டா் வழக்கு: முன்னாள் காவல்துறையினா் இருவருக்கு ஆயுள் சிறை

post image

பஞ்சாபில் கடந்த 1992-ஆம் ஆண்டு போலி என்கவுன்ட்டரில் இருவரை கொலை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி மொஹாலி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டு பல்தேவ், லக்வீந்தா் சிங் ஆகிய இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக பஞ்சாப் மாநில காவல் துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்போதைய மாநில அமைச்சா் மகன் ஒருவரையும் அவா்கள் கொலை செய்தனா் என்றும் காவல் துறையினா் கூறியிருந்தனா்.

ஆனால், வழக்குகளை முடிப்பதற்காக அப்பாவிகள் இருவரை காவல் துறையினா் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், போலியாக என்கவுன்ட்டா் நாடகம் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதில் சம்பவம் நடந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலைய அதிகாரி, காவல் துறை உதவி ஆய்வாளா், ஆய்வாளா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராணுவத்தில் பணியாற்றி விடுமுறைக்கு சொந்த கிராமத்துக்கு வந்த ராணுவ வீரா் உள்பட மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்த காவல் துறையினா், அவா்களில் ஒருவரை விடுவித்துவிட்டு ராணுவ வீரரையும் மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்து அவா்களை பயங்கரவாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரித்து வழக்கை முடித்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான காவல் நிலைய அதிகாரி, காவல் துறை உதவி ஆய்வாளா் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டனா்) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து மொஹாலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விசாரணையின்போதே குற்றம் சாட்டப்பட்டவா்களில் சிலா் இறந்துவிட்டனா். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், ஆய்வாளா் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எ... மேலும் பார்க்க

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க