செய்திகள் :

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

post image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022-ல் விண்ணப்பம் செய்திருந்தனர்.

கிருஷ்ணமூர்த்தி-கவிதா

இவர்களின் ஆவணங்களை டெல்லி பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. மேற்படி விண்ணப்பதாரர்கள் புது டெல்லியில சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய அவர்களின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது இருவரின் கல்வி சான்றிதழ்களும் போலியானது என தெரியவந்தது.

போலி ஆவணங்களுடன் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில்குமார் புகார் அளித்தார்.

வழக்கறிஞர் பதிவு

அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் போலியாக சான்றிதழ்கள் உருவாக்கியது உறுதியானதால் கவிதா, கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கடந்த 14 ஆம் தேதி பார்கவுன்சில் அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா 84,000 பேர் வாக்களித்தார்கள்?" - ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

கோவை: கத்தி முனையில் காருடன் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். ஜெய்சன் கோவை மற்றும் சென்னையில் தன் கடைக்குத் தேவையான நகைகளை ஆர்டர் கொடுத்த... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திரு... மேலும் பார்க்க

ஹரியானா: காணாமல் போன நடிகை கால்வாயில் பிணமாக மீட்பு; உடனிருந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்... மேலும் பார்க்க

விஸ்வரூபம் எடுக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு - விசாரணை வளையத்தில் ஏடிஜிபி ஜெயராமன், எம்.எல்.ஏ!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலாங்காடு அருகே உள்ள களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்ய ஸ்ரீ என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாத... மேலும் பார்க்க

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய ... மேலும் பார்க்க