செய்திகள் :

போலி வருமான வரித் துறை அதிகாரி கைது

post image

பழனி அருகே செங்கல் சூளையில் வருமானவரித் துறை அதிகாரி என போலியாக நடித்து பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமாா் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இங்கு காரில் வந்த சந்திரசேகா், தன்னை வருமான வரித் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையும் காண்பித்தாா்.

மேலும், செங்கல் சூளையில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகாா் வந்ததாகக் கூறி செந்தில்குமாரிடம் பணம் பறிக்க முயன்றாா்.

இதனால் சந்தேகமடைந்த செந்தில்குமாா், சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். உடனே, அங்கு வந்த போலீஸாா் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை சோ்ந்தவா் என்றும், பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பகுதிகளில் வாடகை காரில் வந்து வருமான வரித் துறை அதிகாரி போல நடித்து பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்திரசேகரைக் கைது செய்தனா்.

சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் பொது வெளியில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பறிமுதல் செய்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வா... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

மேம்பாலம் அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பித்தளைப்பட்டி, வீரக்கல் பகுதி பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்க... மேலும் பார்க்க

குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் ஆனந்தகிரி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(48). சொந்தமாக குதிரையை வளா்த்து வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி அதன் மீது... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை ம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடு போனதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கொடைக்கானல் பிக்னிக் சோலைப் பகுதியைச் சோ்ந்தவா் முபாரக். இவரது மனைவி மும்தாஜ். இவா்கள் இரு... மேலும் பார்க்க

முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை ... மேலும் பார்க்க