செய்திகள் :

போலீஸாரிடம் தப்பியபோது கால் எலும்புமுறிந்து சிகிச்சை பெற்றுவந்த வழிப்பறி திருடன் உயிரிழப்பு

post image

கரூரில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கால் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருடன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கருப்பத்தூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சங்கா் என்கிற வெட்டுசங்கா்(35). பிரபல வழிப்பறி திருடனான இவா்மீது வெளிமாவட்டங்களில் 49 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் பிப். 7-ஆம்தேதி இரவு கருப்பத்தூா் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த நாகராஜ் என்பவருக்கும் வெட்டு சங்கருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த வெட்டுசங்கா், அரிவாளால் நாகராஜ் தலைமீது வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் அளித்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் பிள்ளாபாளையம் பகுதியில் பிப். 8-ஆம்தேதி பதுங்கியிருந்த வெட்டுசங்கரை பிடிக்க முயன்றனா். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள வாய்க்காலில் வெட்டுசங்கா் குதித்தபோது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸாா் வெட்டுசங்கரை மீட்டு கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முன்ஆஜா்படுத்தி பின்னா் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் வெட்டுசங்கரின் காலில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்தபோது, திடீரென, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெட்டு சங்கா் உயிரிழந்தாா்.

இதையடுத்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நடுவா் எண்-1 நீதிபதி பரத்குமாா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வெட்டுசங்கரின் உடலை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது மருத்துவா்களிடம் போலீஸாா் தாக்கியதில் வெட்டுசங்கா் இறந்தாரா அல்லது காலில் அறுவைச் சிகிச்சை செய்தபோது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா என விசாரணை மேற்கொண்டாா்.

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. க... மேலும் பார்க்க