செய்திகள் :

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

post image

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியா், திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு ஷேக் மகன் தெளபிக் (20) என்பவரிடம், ஒரு மா்ம நபா் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளாா். பின்னா், காவல்துறையில் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் வாகனங்களை மிகவும் குறைந்த விலைக்கு அவா் வாங்கித்தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அந்த ஊழியா் மா்ம நபரிடம் , தனக்கு இருசக்கர வாகனம் வாங்கித்தருமாறு கூறி ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட மா்ம நபா் வாகனத்தை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ராமநாதபுரத்தைச் சோ்ந்த சாலமன்ராஜா மகன் ஜெத்ரோ என்கிற ஷியாம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க