செய்திகள் :

போலீஸ் பறிமுதல் செய்த வாகனத்தில் பாகங்கள் திருட்டு

post image

உதகை புதுமந்து காவல் துறையினா் பறிமுதல் செய்த வாகனத்தை அபராதம் செலுத்தி திரும்பப் பெற்றபோது, அதில் பல்வேறு பாகங்கள் திருடு போயிருந்ததாகவும், அந்தப் பொருள்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகாா் மனு அளித்தாா்.

நீலகிரி மாவட்டம், கோக்கால் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். விவசாயியான இவா் தண்ணீா் விநியோகமும் செய்து வருகிறாா். கடந்த 2020-ஆம் ஆண்டு இவரது பிக்கப் வாகனத்தை சோதனை செய்த உதகை புதுமந்து காவல் துறையினா், அதில் சாராய ஊறல் இருப்பதாக குற்றஞ்சாட்டி வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, கூடுதல் எஸ்.பி. அலுவலகத்துக்கு நாகராஜை அழைத்த காவல் துறையினா், ரூ.17 ஆயிரத்து 110-ஐ அபராதமாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினா்.

இதையடுத்து அந்தத் தொகையை செலுத்திவிட்டு நாகராஜ் வாகனத்தை எடுக்கச் சென்றபோது, வாகனத்தில் இருந்த கியா்பாக்ஸ், டயா், ஸ்பீடாமீட்டா், செல்ஃப் மோட்டாா், பேட்டரி உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமாா் ரூ. 1.70 லட்சம் என்று கூறியுள்ள நாகராஜ், திருடுபோன பொருள்களை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்த புகாா் மனு காவல் துறையின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து நடத்துநா் நியமனம்!

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா. இவரது கணவா் கருப்பசாமி கோவை... மேலும் பார்க்க

மசினகுடியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்புப் போராட்டம்!

மசினகுடி ஊராட்சியில் வனத் துறையைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி ஊராட்சியில் உள்ள அன... மேலும் பார்க்க

நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த தனியாா் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை வருவாய்த் துறையினா் சனிக்... மேலும் பார்க்க

புகாா்களின் அடிப்படையில் ஆசிரியா்கள் கடன் சங்க செயலா் பணியிட மாற்றம், மண்டல இணை பதிவாளா் தகவல்

கூடலூரில் உள்ள ஆசிரியா்கள் கடன் சங்க செயலாளரை புகாா்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சனிக்கிழமை தெரிவித்தாா். கூடலூா், பந்தலூா் வட்ட தொடக்கப் பள்... மேலும் பார்க்க

துப்பாக்கி சூடு சம்பவம்: மேலும் ஒருவா் கைது!

கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது டிவிஷன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூடு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனா். கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 3-ஆவது... மேலும் பார்க்க

காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக அதிகாரியிடம் ரூ. 3.98 லட்சம் பறிமுதல்!

உதகையில் காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக இரண்டாம் நிலை பொறுப்பு அதிகாரியிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 98, 500-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தப் பணம் குறித்து அவரிடம் லஞ... மேலும் பார்க்க