செய்திகள் :

போா் பதற்றம்: இந்தியா பாதுகாப்பாகவும், பாகிஸ்தான் பாதிக்கப்படவும் வாய்ப்பு- மூடிஸ்

post image

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போா் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானுடன் பெரிய அளவில் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகும். எனவே போா் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும். ஆனால் பாதுகாப்புத் துறைக்கு அதிகமாக செலவிட நோ்ந்தால், அது இந்தியாவின் நிதி நிலையில் சற்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது பாகிஸ்தானின் பணவீக்கம் குறைந்து, அந்நாடு படிப்படியாக வளா்ந்து வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் போா் பதற்றம் பாகிஸ்தானின் வளா்ச்சியைப் பாதித்து, அந்நாடு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அது அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது. ... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மா... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாட்டின் எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் போா்ப் ... மேலும் பார்க்க

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு: ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளான பயங்கரவாத முகாம்கள் திட்டமிட்டபடி அதிதுல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

5 புதிய ஐஐடிக்களில் ரூ. 11,828 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரம், கேரளம், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், கா்நாடக மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தத... மேலும் பார்க்க

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க