மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்கின்றன. இவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிக்கொண்டிருந்தார். அந்த மகனும் 18 வயதை நிரம்பாத மைனர் என தெரிய வந்திருக்கிறது.
அவனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்துவிட்டார்கள். சகீல் தனது மகனுக்கு பெண் பார்த்து முடிவு செய்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அதில் மகனுடன் திருமணாக இருக்கும் பெண்ணுடன் சகீலுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இது அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி சகீல் தனது மகனுக்கு பார்த்திருக்கும் பெண்ணுடன் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என்று இருந்தார். இது குறித்து சகீல் மனைவி சபானா கூறுகையில், ''நாள் முழுவதும் வீடியோ காலில்தான் இருப்பார். அதனைபார்த்து மற்றவர்களிடம் சொன்னபோது நான் சொன்னதை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. இதனால் நானும், எனது மகனும் சேர்ந்து ஆதாரங்களை திரட்டினோம். இந்த உறவு தெரிந்து நாங்கள் கேள்வி கேட்ட போது எங்களை எனது கணவர் அடித்தார். மகனுக்கு பார்த்த பெண்ணுடன் தந்தைக்கு தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு எனது மகன் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டான்'' என்றார்.
சகீல் மகன் கூறுவதென்ன?
இது குறித்து சகீல் மகன் கூறுகையில், எனது பாட்டி மற்றும் தாத்தாவும் எனது தந்தையின் முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினார். மேலும் ரூ.2 லட்சம் மற்றும் 17 கிராம் தங்கத்துடன் எனது தந்தை வீட்டை விட்டு ஓடிச்சென்று எனக்கு பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்'' என்று குறைபட்டுக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் இதே உத்தரப்பிரதேசத்தில் அலிகரை சேர்ந்த பெண் தனது மகளுக்கு பார்த்து வைத்திருந்த மணமகனுடன் ஓட்டம் பிடித்தார். நகை, பணம் என 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அப்பெண் எடுத்துச்சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.