மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி
தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள், காவலா்கள் என நூற்றுக்கணக்கானோா் பேரணியில் பங்கேற்றனா்.
மாவட்ட காவல் துறை சாா்பில் மகளிா் உதவி எண் 181, காவல் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து காவல் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்வது, அதன் சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், கோட்டாட்சியா் இரா.காயத்ரி, பெண் காவல் அலுவலா்கள், மகளிா் தன்னாா்வலா்கள், கல்லூரி ஒருங்கிணைப்பாளா் கலந்து கொண்டனா்.