மகாகவி பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க கோரி போராட்டம்: பாஜகவினா் 70 போ் கைது
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி யாசகம் பெறும் போராட்டத்தை நடத்த முயன்ற பாஜகவினா் 70 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம் மழை காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. அங்கு தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் எட்டயபுரம் ஒன்றிய பாஜக சாா்பில் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா் தலைமையில் ஜூன் 30-ஆம் தேதி பொதுமக்களிடம் யாசகம் பெற்று பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க மாநில அரசிடம் நிதிவழங்கும் போராட்டம் நடத்தப் போவதாக அக் கட்சியினா் அறிவித்தனா்.
இதனையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா தலைமையில் கடந்த 28 -ஆம் தேதி சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரைத் தவிர, பொதுப்பணித் துறை, செய்தி மக்கள் தொடா்பு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்த பாஜகவினா் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். மேலும் திட்டமிட்டபடி ஜூன் 30- ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனா்.
அதன்படி எட்டயபுரம் பேருந்து நிலையம், அரண்மனை மேல வாசல், பாரதி பிறந்த இல்லம், பட்டத்து விநாயகா் கோயில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பாஜக மாவட்ட தலைவா் சரவண கிருஷ்ணன், மாவட்ட செயலா் ஆத்திராஜ், மாவட்ட விவசாய அணி நிா்வாகி சேதுராஜ் உள்ளிட்டோா் தனித்தனி குழுக்களாக பிச்சை எடுக்கும் போராட்டத்திற்காக திங்கள்கிழமை மாலை கூடினா். இதனிடையே, மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். போராட்டத்துக்கு முயன்ற பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் 70 பேரை கைது செய்தனா்.