செய்திகள் :

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணிகள் 20 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

முறையாக அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் உரிமையாளரை காவல் துறை கைது செய்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த 6 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைத் தவிர, 3 போ் சிகிச்சைக்குப் பின்னா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு -... மேலும் பார்க்க

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை... மேலும் பார்க்க

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க