செய்திகள் :

மகாராஷ்டிரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்!

post image

தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான மாநில அரசின் தீா்மானம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் தற்போது 1 முதல் 4 -ஆம் வகுப்பு வரை மராத்தியும் ஆங்கிலமும் கட்டாய மொழிப் பாடங்களாக உள்ளன.

இந்நிலையில், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு மாநில கல்வித் திட்டத்தின்கீழ் மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தேசிய கல்விக் கொள்கையின்கீழ், 2025-26ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். 2,3,4,6 வகுப்புகளுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டிலும், 5, 9, 11 வகுப்புகளுக்கு 2027-27-ஆம் கல்வியாண்டிலும், 8, 10, 12 வகுப்புகளுக்கு 2028-29ஆம் கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகவல் தொடா்புக்கு பயன்படுத்தப்படுவதால் ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் விமா்சனம்: மாநில அரசின் நடவடிக்கையை விமா்சித்துள்ள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜய் வதேத்திவாா், ‘இது மராத்தி மொழியின் பெருமைக்கு எதிரானது. விருப்ப மொழியாக ஹிந்தியை கற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதை திணிப்பது தவறானது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மராத்தியை மூன்றாவது கட்டாய மொழியாக்க முடியுமா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

‘தீவிரமாக போராடுவோம்’: மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே கூறுகையில், ‘ஹிந்தி தேசிய மொழி கிடையாது. பிற மாநில மொழிகளைப் போன்றதே. மற்றொரு பிராந்தியத்தின் மொழியை மகாராஷ்டிரம் மீது திணிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க