செய்திகள் :

மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

அவர்களுக்கு இன்னும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல்தான் இருக்கின்றன. இதனால் பழங்குடியின மக்களிலிருந்து உயர் பதவிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பாடகர் மகி
பாடகர் மகி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மகி என்ற 24 வயது பெண் இசைக் கலைஞர், தனது மக்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திப் பாடி இருக்கும் ஒரு பாப் பாடல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி இருக்கிறது.

பழங்குடியின சமூக ஆர்வலரான இசைக்கலைஞர் மகி தனது பாடலில் தனது மக்கள் எந்த அளவுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் என்பது குறித்து 'Jungle Cha Raja' என்ற பெயரில் ஒரு பாப் பாடலை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அப்பாடல் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

அவர் தனது பாப் பாடலில், ''நீங்கள் உங்களது கொடியை வளர்ச்சிக்காக உயர்த்துகிறீர்கள். நான் எனது கொடியை இயற்கைக்காகத் தூக்குகிறேன். வனப்பகுதியை நாங்கள்தான் ஆள்கிறோம்.

நாங்கள் வனப்பகுதியின் உண்மையான பாதுகாவலர்கள். புலிகளின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நாங்கள்தான் வனத்தின் உண்மையான மன்னர்கள்.

நீர், நிலம், காடுதான் பழங்குடியினரின் அடையாளம். பழங்குடியின மக்கள் புயலைப்போல் எழும்போது, காட்டில் உள்ள காற்று கூட வழிவிடும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தனது பாடலில் தன் சமுதாய மக்கள் காட்டிற்குச் சென்று விறகு, தேன் எடுப்பது, அவர்கள் காட்டில் எந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

மகி

பாப் பாடலில் கவனம் செலுத்துவது குறித்து மகி கூறுகையில், ''ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்காக பாப் பாடலில் கவனம் செலுத்தினேன்.

பாப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் என்பதால் அவை பெரிய அளவில் சென்றடையும் என்பதால் அதில் கவனம் செலுத்தினேன்.

இந்தியாவில் 50 சதவீத மக்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே கணிசமான மக்களைச் சென்றடைய பாப் பாடல் ஒரு கருவியாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்த... மேலும் பார்க்க

குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்... மேலும் பார்க்க

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக... மேலும் பார்க்க

Reborn doll: குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள்; சர்ச்சையைக் கிளப்பக் காரணம் என்ன?

வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் இந்த ரீபான் (Reborn) பொம்மைகள், தத்ரூபமாக உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் கூட இது தொடர்பான வீடியோக்... மேலும் பார்க்க

Instagram Reels: மணப்பெண்ணுக்கு மீன் வடிவில் தலை அலங்காரம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள்.அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங... மேலும் பார்க்க

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க