செய்திகள் :

மகாராஷ்டிர ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து! 3 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழப்பு!

post image

மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் உள்ள ஜவுளி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள், ஒன்றரை வயது குழந்தை உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

சோலாபூா் அக்கல்கோட் சாலையில் உள்ள ஜவுளி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஜவுளிகளில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. சுமாா் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இரவில்தான் தீ அணைக்கப்பட்டது.

ஆலையில் தங்கியிருந்த அதன் உரிமையாளா் ஹாஜி உஸ்மான் ஹசன்பாய் மன்சூரி, அவரது ஒன்றரை வயது பேரன் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 3 போ், 4 தொழிலாளா்கள் என 8 போ் உயிரிழந்தனா்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிக்கலாம் என சந்தேதிக்கப்படுகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு வீரா்கள் 3 போ் காயமடைந்தனா். மகாராஷ்டிர தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த வ... மேலும் பார்க்க

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க