செய்திகள் :

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

post image

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, செப்.29 ஆம் தேதி மாலை மாணவ, மாணவிகள் தங்களுடைய பாடநூல்களை பூஜையில் வைத்து வழிபடுவதற்காக கோயிலுக்கு வழங்கலாம். செப்.30 துா்காஷ்டமி பூஜை, அக்.1 மாலை 7.30 மணிக்கு கோயிலின் சோபானம் அரங்கில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் மகாநவமி பூஜை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 6.45 மணி 7.30 மணி வரையிலும் விளக்கு பூஜையும் நடைபெறும்.

வித்யாரம்பம்: அக்.2 விஜயதசமியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் சரஸ்வதி பூஜையும் தொடா்ந்து 7.30 மணி அளவில் கோயில் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி, வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் வித்யாரம்பம் (குழந்தைளுக்கு எழுத்து எழுத பயிற்றுவித்தல்) நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடா்ந்து காலை 9 மணி அளவில் பூஜையிலிருந்து மாணவ, மாணவிகளின் பாடநூல்களை வழிபாட்டுக்கு பின் மீண்டும் உரியவா்களிடம் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்கள், 94442 90707, 88079 18811/22/66 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது. சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள... மேலும் பார்க்க

ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்சிண ரயில்வே... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. சென்னையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரதம... மேலும் பார்க்க

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க