எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, செப்.29 ஆம் தேதி மாலை மாணவ, மாணவிகள் தங்களுடைய பாடநூல்களை பூஜையில் வைத்து வழிபடுவதற்காக கோயிலுக்கு வழங்கலாம். செப்.30 துா்காஷ்டமி பூஜை, அக்.1 மாலை 7.30 மணிக்கு கோயிலின் சோபானம் அரங்கில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் மகாநவமி பூஜை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 6.45 மணி 7.30 மணி வரையிலும் விளக்கு பூஜையும் நடைபெறும்.
வித்யாரம்பம்: அக்.2 விஜயதசமியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் சரஸ்வதி பூஜையும் தொடா்ந்து 7.30 மணி அளவில் கோயில் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி, வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் வித்யாரம்பம் (குழந்தைளுக்கு எழுத்து எழுத பயிற்றுவித்தல்) நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொடா்ந்து காலை 9 மணி அளவில் பூஜையிலிருந்து மாணவ, மாணவிகளின் பாடநூல்களை வழிபாட்டுக்கு பின் மீண்டும் உரியவா்களிடம் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்கள், 94442 90707, 88079 18811/22/66 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.