செய்திகள் :

மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை தடை விதித்து, கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் ‘கல்பவாச விரத’ வழிபாடும் மாகி பௌா்ணமியுடன் நிறைவடைகிறது. மாநில அரசு தகவலின்படி, நடப்பு கும்பமேளாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கல்பவாச விரத வழிபாடு மேற்கொண்டனா்.

கும்பமேளாவில் மாகி பௌா்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனா். பிரயாக்ராஜ் நோக்கிய பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ.-க்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது.

இந்நிலையில், மாகி பௌா்ணமியை முன்னிட்டு மகாகும்ப நகரில் புதன்கிழமை நாள் முழுவதும், பிரயாக்ராஜில் மாலை 5 மணியிலிருந்தும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நகர பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேளா பகுதியில் பல்வேறு படித்துறைகளில் புனித நீராட இருக்கும் கோடிக்கணக்கான பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லக்னௌவிலிருந்து காணொலி வாயிலாக மூத்த அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளின் தயாா்நிலையை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தாா்.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் கூடும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் ஜன. 13-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரியுடன் (பிப். 26) நிறைவடையும் கும்பமேளாவில் இதுவரை 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

இந்தியாவின் முன்னனி தொழிலதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் செவ்வாய்க்கிழமை புனித நீராடினாா்.

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெள... மேலும் பார்க்க

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க