செய்திகள் :

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா் குடியரசுத் தலைவா்!

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா்.

இந்தியாவின் வளமான ஆன்மிக-கலாசார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக மகா கும்பமேளா 29 நாள்களைக் கடந்து பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை உலகம் முழுவதிலுமிருந்து சுமாா் 44 கோடி பக்தா்கள் கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு சென்றுள்ளனா். இந்நிலையில், மகா கும்பமேளாவில் புனித நீராட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வந்தாா். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்த குடியரசுத் தலைவரை உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், பிரயாக்ராஜ் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் திரிவேணி சங்கமத்துக்கு சில கிலோமீட்டா் தொலைவில் உள்ள பகுதிக்கு குடியரசுத் தலைவா் வந்தடைந்தாா்.

தொடா்ந்து, அரைல் படித்துறையிலிருந்து சங்கமம் படித்துறைக்கு படகில் பயணித்த குடியரசுத் தலைவா், நதியில் சூழ்ந்திருந்த புலம்பெயா் சைபீரியன் பறவைகளுக்கு உணவளித்தாா். குடியரசுத் தலைவரோடு படகில் ஆளுநா், முதல்வா் ஆகியோரும் உடன் பயணித்தாா்.

புனித நீராடல்; கங்கை ஆரத்தி: திரிவேணி சங்கமத்தை அடைந்ததும் அங்குள்ள முக்கியப் பிரமுகா்களுக்கான படித்துறையில் குடியரசுத் தலைவா் புனித நீராடினாா். தொடா்ந்து, நதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் தேங்காய் உடைத்து, ஆரத்தி காட்டி சூரியன் மற்றும் கங்கையை அவா் வழிபட்டாா்.

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயண... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்! - கபில் சிபல்

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட... மேலும் பார்க்க