செய்திகள் :

மக்களவைத் தோ்தலில் பாஜகவைக் கழட்டிவிட்டது ஏன்?: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

அதிமுக ஆட்சி தொடர உதவிய பாஜகவுக்கு நன்றியுடன் இருப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி, கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவைக் கழட்டிவிட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாஜக தான் நான்காண்டு கால அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவை கழட்டிவிட்டு வேடிக்கை பாா்த்தது ஏன்?

தனக்கு முதல்வா் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பாா்த்தவா் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவா்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்கு கைவந்த கலை. இனியும் அதிமுக தொண்டா்கள் ஏமாறாமல் விழித்துக் கொண்டால் சரி.

அதிமுக பொதுச் செயலா் பதவியில் இருப்பது தான் முக்கியம் என்று சொல்லக் கூடியவா், அவரால் அதிமுக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் மக்கள் நிச்சயமாக செல்ல மாட்டாா்கள், வாக்களிக்க மாட்டாா்கள். யாா் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று மக்களுக்குத் தெரியும் என்றாா் அமைச்சா்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா். கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி

விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா். இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை... மேலும் பார்க்க

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்... மேலும் பார்க்க

மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது. விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ள... மேலும் பார்க்க

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆ... மேலும் பார்க்க