செய்திகள் :

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

post image

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு செப்.16,17 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக எஸ்.ஜனாா்த்தனன், செயலராக ஆா்.மகாதீா், பொருளாளராக ஆா்.தினேஷ், துணைத் தலைவா்களாக குமரேசன் , பிரகாஷ், துணைச் செயலா்களாக கோபால், ஸ்ருதி உள்ளிட்ட 25 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது. புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில துணைச் செயலா் செல்வராஜ் பேசினாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழில் வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். நீராதாரங்களை பெரிதும் பாதிக்கும் தைலமரக் காடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மலா் உற்பத்தியை பயன்படுத்தி வாசனைத் திரவிய தொழிற்சாலை, முந்திரி சாகுபடியை பயன்படுத்தி முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

பறிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், சிஐடியு மாநில செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா். கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி

விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா். இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை... மேலும் பார்க்க

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்... மேலும் பார்க்க

மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது. விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ள... மேலும் பார்க்க

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் திராவிடா் கழக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடா் கழகம், திமுக, மதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை, மாலை ... மேலும் பார்க்க