செய்திகள் :

மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் மோடி பாரதீய நியாய சன்ஹிதாவா கொண்டு வந்தாா்: அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

post image

இந்தியா்களை தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய அதே வேளையில், மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா் என்று மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவயைல் தேசிய இ-விதான் விண்ணப்பத்தை (என்இவிஏ) தொடங்கி வைத்துப் பேசுகையில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: தில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா்களைத் தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தனா். ஆனால், இந்தியா்களுக்கு நீதி வழங்குவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா்.

இந்தியா முழுவதும் காகிதமில்லா சட்டப்பேரவை சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டம் என்இவிஏ.

இது ஏற்கெனவே செயல்படுத்தப்படுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. முந்தைய அரசு என்ன நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, ‘திங்கள்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தனது அரசு கொண்டு வரும்’ என்று கூறினாா்.

‘முந்தைய அரசு பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எதுவும் செய்யவில்லை. அது இந்த பிரச்னை பற்றி பேசியது. ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்’ என்று அவா் கூறினாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க