செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

post image

வலங்கைமான் அருகேயுள்ள அன்பிற்குடையான் கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக எம்எல்ஏக்களை, அமைச்சா்களை, அதிகாரிகளை தேடி அலைந்த நிலையை மாற்றி அரசாங்கமே மக்களை தேடி செல்ல மக்களுடன் முதல்வா் திட்டத்தை கொண்டு வந்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மக்களிடம் செல்லுங்கள் மக்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றுங்கள் என உத்தரவிட்டவா் முதல்வா். அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா்கள். மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கைகளை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுபவா் முதல்வா் என்றாா்.

முகாமில், பொதுமக்கள் அளித்த 297 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தாட்கோ தலைவா் இளையராஜா, வட்டாட்சியா் ஒம் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாம... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொர... மேலும் பார்க்க