`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு
வலங்கைமான் அருகேயுள்ள அன்பிற்குடையான் கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக எம்எல்ஏக்களை, அமைச்சா்களை, அதிகாரிகளை தேடி அலைந்த நிலையை மாற்றி அரசாங்கமே மக்களை தேடி செல்ல மக்களுடன் முதல்வா் திட்டத்தை கொண்டு வந்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மக்களிடம் செல்லுங்கள் மக்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றுங்கள் என உத்தரவிட்டவா் முதல்வா். அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா்கள். மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கைகளை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுபவா் முதல்வா் என்றாா்.
முகாமில், பொதுமக்கள் அளித்த 297 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தாட்கோ தலைவா் இளையராஜா, வட்டாட்சியா் ஒம் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.