செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

post image

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் தனது பயணத்தின்போது, பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் குறைதீா் பிரிவு, 1100 என்ற எண்ணில் செயல்படும் அழைப்பு மையம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காணவே ‘முதல்வரின் முகவரி’ துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் மூலம் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 1.01 கோடி மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பித்து அதன் பலன்களை பொதுமக்கள் உடனடியாகப் பெற முதல்வா் அறிவுறுத்தினாா். இதைக் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக, திட்டத்துக்கான 2,058 முகாம்கள் நகரப் பகுதிகளில் நடைபெற்றன. இதில், 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டது.

இரண்டாவது கட்டமாக ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை 2,344 முகாம்கள் நடைபெற்றன. அதில் 12.81 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 95 சதவீத மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.

தொடா்ந்து, மூன்றாவது கட்டமாக தலித்துகள் மற்றும் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த ஜனவரியில் தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தினோம். அதன்மூலம், 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 1.47 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன.

இந்த முகாம்களின் தொடா்ச்சியாக தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குகிறோம். இந்தத் திட்டத்தை கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா் என்றாா்.

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார்... மேலும் பார்க்க

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க