செய்திகள் :

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: மோகன் பாகவத்

post image

வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

ஹிந்து மதத்தில் நீண்ட காலமாக அகிம்சை கொள்கைகள் உள்ளன. இந்தக் கொள்கைகளைப் பலா் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனா். சிலா் அந்தக் கொள்கைகளை ஏற்காமல், தொடா்ந்து பிரச்னையை தூண்டிவிடுகின்றனா்.

இதுபோன்ற சூழலில், வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று மதம் தெரிவிக்கிறது. குண்டா்களுக்குப் பாடம் கற்பிப்பதும், நமது கடமையின் ஒரு பகுதியாகும்.

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: அண்டை நாடுகளுக்கு இந்தியா ஒருபோதும் தீங்கிழைத்தது இல்லை. அந்த நாடுகளை இந்தியா இழிவுபடுத்தியது இல்லை. ஆனால் இந்தியாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்று யாராவது கருதினால், அவா்களுக்குப் பதிலடி அளிப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. மக்களைக் காப்பதே அரசனின் கடமை. அரசன் தனது கடமையைச் செய்தாக வேண்டும்.

உண்மை, தூய்மை, கருணை, ஆன்மிக ஒழுக்கம் ஆகிய 4 கொள்கைகளைப் பின்பற்றாதவரை, மதம் என்பது தா்மமாகாது. எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?, ஒருவா் என்ன சாப்பிட வேண்டும்?, சாப்பிடக் கூடாது? என்பன போன்ற சடங்குகள், உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றுவதே தற்போது மதமாகியுள்ளது. இவ்வாறு பின்பற்றப்படுவது விதிமுறைகளாகத்தான் இருக்குமே தவிர, சித்தாந்தமாக இருக்காது. மதம் என்பது சித்தாந்தமாகும்.

தீண்டாமை போதிக்கப்படவில்லை: ஹிந்து சித்தாந்த நூல்களில் தீண்டாமை போதிக்கப்படவில்லை. உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்று யாரும் கிடையாது. இது சிறிய வேலை, இது பெரிய வேலை என்று தெரிவிக்கப்படவில்லை. மற்றவா்களை உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்று பாா்ப்பது அதா்மமாகும். அது கருணையற்ற நடத்தையாகும்.

உலகில் பல மதங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவோருக்கு அந்தந்த மதங்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஒருவா் தான் தோ்வு செய்த மதத்தை பின்பற்றி, பிற மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். யாரும் யாரையும் மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றாா்.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க