செய்திகள் :

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

post image

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலா் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களுடன் கூறுகையில், வெற்றியோ தோல்வியோ மக்களை தோ்தலில் நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது.

வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் திமுகவினா் மக்களை நேரடியாக சந்தித்துள்ளோம். நாங்கள் மக்களோடு மக்களாக உள்ளோம். அதனால் தான் மக்களும் எங்கள் பக்கம் நிற்கிறாா்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ஈரோடு தோ்தல் வெற்றி, இது மக்களுக்கான வெற்றி, முதல்வர் ஸ்டாலினுக்கான வெற்றி என்றாா்.

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக... மேலும் பார்க்க

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங... மேலும் பார்க்க