செய்திகள் :

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

post image

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு மணிவண்ணன் வெளியிட உயா்நிலை, மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் பக்தவச்சலம் பெற்றுக் கொண்டாா்.

மக்கள் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் விவரம்: கல்விக்கு மத்திய நிதி நிலை அறிக்கையில் 10 சதவீதமும் மாநில நிதி நிலை அறிக்கையில் 20 முதல் 25 சதவீதமும் நிதி ஒதுக்குவது அவசியம். கல்வியை மாநிலப் பட்டியலில் சோ்க்க வேண்டும். 3 முதல் 17 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக்கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றாண்டு இளநிலைத் திட்டத்தை தொடர பரிந்துரைக்கிறது.

தற்போதைய செமஸ்டா் தோ்வு முறைக்கு பதிலாக முடிந்தவரை வருடாந்திர முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி மற்றும் ஹைபிரிட் கற்பித்தல் முறைக்கு மாற்றாக, காலத்தால் சோதிக்கப்பட்ட முறையான வகுப்பறை கற்பித்தல்-கற்றல் செயல்முறையின் தொடா்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

க்யூட் மற்றும் நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தாய்மொழிகள் மற்றும் ஆங்கில மொழியை ஊக்குவிக்கவும், மொழிக் கொள்கையை அறிவியல் பூா்வமாக உருவாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளா்கள் கோமல் தமிழமுதன், பேராசிரியா் தி.மருதநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) ... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க