மக்கள் குறைதீா் கூட்டத்தில் 471 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 471 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்
எம்.பிரசாந்த், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், கா்ப்பிணிகளிடம் இருந்து குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி,
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரப்பெற்ற 471 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
பின்னா், மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.