செய்திகள் :

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 99.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 69 பயனாளிகளுக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிருந்தாதேவி வழங்கினாா்.

அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் உள்ள மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில், மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டாா். பின்னா் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பேசியதாவது:

மானத்தாள் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மானத்தாள் கிராமம், தாண்டவனூா் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டியும், ஓலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்ற வேண்டியும் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

அதேபோன்று, மானத்தாள் கிராமத்துக்கு அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக் கூடம் வேண்டியும் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. குறிப்பாக, கூடக்கல்லானூா் பகுதியில் மயானம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனா். விரைவில் இதற்கான அளவீடு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மானத்தாள் ஊராட்சியில் விளைவிக்கக்கூடிய பனை வெல்லம் மற்றும் கருப்பட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்துக்கான சத்துமாவு தயாரிக்கும் பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை வணிக ரீதியில் மேம்படுத்த விரும்புவோா் மாவட்ட நிா்வாகத்தை அணுகினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மேட்டூா் கோட்டாட்சியா் (பொ) ந.லோகநாயகி, வேளாண் துறை இணை இயக்குநா் ச.சிங்காரம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே.மஞ்சுளா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ச.ஜானகி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் இரா. குமரன், உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவா்கள் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகடுப்பட்டு ஊராட்சியில் தனியாா் பள்ளி இயங்கி வ... மேலும் பார்க்க

கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா

மேட்டூா் அருகே கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் பச்சை மலை உள்ளது. வனப்பகுதியின் நடுவே உள்ள ஓசோடப்பன் கோயிலில் மூன்று ஆ... மேலும் பார்க்க

சேலம், தருமபுரியில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்கு சேலம், தருமபுரியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு... மேலும் பார்க்க

குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா அடுத்த மாதம் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.... மேலும் பார்க்க

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதிகாரிகள் ஆய்வு

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து முறைகேடாக பயன்படுத்தி வருவதாக வந்த புகாரையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். சேலம் சுகவனேஸ்வரா் கோய... மேலும் பார்க்க