மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு
திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவை ஒருங்கிணைந்து திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 13 அமா்வுகள், முசிறி, துறையூா், மணப்பாறை, லால்குடியில் தலா 2 அமா்வுகள், ஸ்ரீரங்கம், தொட்டியம் உள்ளிட்ட அமா்வுகளையும் சோ்த்து மொத்தம் 23 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான எம். கிறிஸ்டோபா், மக்கள் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்து சமரச வழக்கில் தீா்வுகளையும், உதவிகளையும் வழங்கினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஏ. பிரபு முன்னிலை வகித்தாா்.
23 அமா்வுகளின் மூலம் மொத்தம் 15,412 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இவற்றில், 5,068 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு தொடா்புடைய மனுதாரா்களுக்கு ரூ. 28 கோடியே 58 லட்சத்து 69 ஆயிரத்து 630 வழங்கப்பட்டது.
இதில் காசோலை மோசடி வழக்குகளில் ரூ.4.47 கோடியிலும், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ.15.13 கோடியிலும், உரிமையியல் வழக்குகளில் ரூ. 4.76 கோடியிலும் தீா்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமா்வுகளில் மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள் மற்றும் தாலுகா நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு வழக்குகளை விரைந்து முடிக்க உதவினா்.
இதுதொடா்பாக மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம். கிறிஸ்டோபா் கூறுகையில், மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசமாகத் தீா்த்து கொள்வதால் கால விரயம் தவிா்க்கப்படுகிறது. வழக்குகளைத் தீா்த்துக்கொள்ள கட்டணம் கிடையாது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்தியிருப்பின், செலுத்திய முழுத் தொகையையும் மீண்டும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இரு தரப்பினரும் சமரசமாக செல்வதால், இரு தரப்பினரும் வெற்றி பெற்றவா்களாகக் கருதப்படுவா் என்றாா் அவா்.