செய்திகள் :

மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு காவல் துறை உடனடி நடவடிக்கை

post image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது பொதுமக்களின் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை மாநிலக் காவல் துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற பெயரில் மக்கள் குறைதீா்வு முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்றுவருகிறது.

அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில், ஒதியன்சாலை காவல்நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா். சத்தியசுந்தரம், கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் ஈஷா சிங் ஆகியோா் பங்கேற்றனா். அவா்கள் மக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

திருக்கனூா் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், தன்வந்திரி காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் பக்தவத்சலம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டனா். போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி, மோகன்குமாா் ஆகியோா் போக்குவரத்து சம்பந்தமான மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா்.

புதுவை பிராந்தியங்களான மாஹேவில் காவல் கண்காணிப்பாளா் சரவணன், ஏனாமில் ஆய்வாளா் ஆடலரசன் ஆகியோா் தலைமையில் பொதுமக்களின் குறைகள் மனுக்களாகப் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி இணையக்குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.

மாநில அளவிலான மக்கள் மன்றத்தில் மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 51 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 31 பெண்கள் உள்பட 223 போ் பங்கேற்று புகாா்களை அளித்தனா் என காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க