செய்திகள் :

மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தருக்கிறது.

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி மாநில அரசுகளால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு, நீதித்துறை, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

இதன் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, பாஜக ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைத்து வந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசுகளால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிடுவது சரியானதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்கள், மாநில அரசு சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மாநில அரசுகள் வழக்குத் தொடுக்க முடியாது என்றும், மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர்களிடம் காரணத்தை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றங்கள் கேட்க முடியுமா என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த உள்ள நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிர... மேலும் பார்க்க

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பகுதி பெண்கள் - ஆய்வு

பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்து... மேலும் பார்க்க

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.தேரதல் நடைபெறவிருக்கும் நில... மேலும் பார்க்க

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலகா கோரிக்கை விடுத்துள்ளார். இம்பாலில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரணியில் அவர் பேசினார்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரம் மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரது எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. பால்கர் மாவட்டத்தின், விஜய் நகர் பகுதியில் அமைந்திருந்த ... மேலும் பார்க்க