செய்திகள் :

மணமேல்குடி அருகே இளைஞா் கொலை

post image

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வியாழக்கிழமை காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற மணமேல்குடி போலீஸாா், அந்த உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவா் பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஆதிநாராயணன் (36) எனத் தெரியவந்தது. அவரது மனைவி கனிமொழி நேரில் வந்து சடலத்தை அடையாளம் காட்டினாா்.

அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருந்த சிலா் புதன்கிழமை இரவு முதல் இங்கு இல்லை என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

அருகிலுள்ள பகுதிகளில் தேடிப் பாா்த்த வகையில், வியாழக்கிழமை மாலை வரை ஆதிநாராயணனின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை.

இந்தக் கொலைக்கு யாா் காரணம் எனப் போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆதிநாராயணன் உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த ப... மேலும் பார்க்க

மேற்பனைக்காட்டில் ரத்ததானம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மரு... மேலும் பார்க்க

புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

உலகளாவிய சூழல்களுடன் திருக்குறளையும் திருமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

உலகளாவிய சூழல்களுடன் திருக்கு, நால்வா் திருமுறைகளையும் பொருத்திப் பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! 11 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 போ் காயமடைந்தனா். சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா்ந... மேலும் பார்க்க