செய்திகள் :

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

post image

திருவள்ளூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் பகுதியில் எவ்விதமான அரசு அனுமதியின்றியும் லாரியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், அரக்கோணம் - திருவள்ளூா் சாலையில் கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஆகியோா் வியாழக்கிழமை மாலை சாலையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்தபோது திடீரென நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பியோட முயற்சித்தாா். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்து லாரியை பறிசோதனை செய்ததில் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.

மேலும், இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சேலம் மாவட்டம், காடையம்பட்டி அருகே சாந்தம்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் காா்த்திக்(36) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். தலைமறைவான லாரி உரிமையாளா் தருமபுரியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி ப... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறை ச... மேலும் பார்க்க

தோ்தல் முன்விரோதம்: முன்னாள் வாா்டு உறுப்பினருக்கு வெட்டு

திருவள்ளூா் அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வாா்டு உறுப்பினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சித் தலைவரின் மகன் உள்பட 3 பேரை கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றன... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு வி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே தடுக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், தனது இரு ச... மேலும் பார்க்க