செய்திகள் :

மணல் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

post image

அரசு மணல் குவாரி திறப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும், கல்குவாரி உரிமையாளா்கள் சிண்டிகேட் அமைத்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையை உயா்த்தியது கண்டனத்துக்குரியது, இதில் அரசு தலையிட்டு விலையைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது.

சில நாள்களுக்கு முன்பு கனிமம் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ரகுபதி எங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். லாரிகளில் மணலை ஏற்றிச்செல்வதற்கு தனியாருக்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், அதிக அளவில் கனிமங்களை எடுத்துச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவா் உறுதிபட தெரிவித்தாா்.

எம்.சாண்ட், ஜல்லி விலையைக் குறைக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளதை குவாரி உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அமைச்சா் தெரிவித்தாா். மணல் லாரி உரிமையாளா்கள் தரப்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளாா்.

அரசு மணல் குவாரிகளைத் திறப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பு நகலைப் பெற்று 15 நாள்களுக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தாங்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா். அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை தொடங்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க