செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!

post image

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள், 4 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் 2 தேடப்பட்ட குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், காக்சிங் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பீபள் லிபரெஷன் ஆர்மி, யுனைடெட் பீபள்ஸ் பார்ட்டி ஆஃப் காங்லெய்பாக், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் பார்டி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், 7 செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கு இம்பால் மற்றும் தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில், மெத்தபெட்டமைன் மற்றும் யாபா மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதனைக் கடத்திய 4 கடத்தல்காரர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேடப்பட்ட குற்றவாளிகள் கைது!

தேசிய புலணாய்வு ஆணையம் விசாரிக்கும் வழக்கில் தேடப்பட்டு வந்த தௌபல் மாவட்டத்தின் தௌபால் பகாங்கோங் பகுதியைச் சேர்ந்த ரோஹித் சிங் (வயது 33) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அம்மாநிலம் முழுவது கும்பல் தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த கொன்ஷாம் மன்காங் (25), என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!

ஜேஇஇ பிரதானத் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

ஜேஇஇ பிரதானத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ‘அட்டாரி-வாகா சா்வதேச எல்லை’ வியாழக... மேலும் பார்க்க

ஒடிஸா: மற்றொரு நேபாள மாணவி தற்கொலை

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) 20 வயதான நேபாள மாணவி ஒருவா் விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண... மேலும் பார்க்க

பயங்கரவாத ஒழிப்பு: ஸ்ரீநகரில் 21 இடங்களில் சோதனை

காந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதி முஷ்தாக் அகமது ஜா்கரின் வீடு உள்பட ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 21 இடங்களில் காவல் துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத த... மேலும் பார்க்க

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி

இந்தியாவின் ஊடக - பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா். மும்பையில் தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேச... மேலும் பார்க்க

முஸ்லிம்களை தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான்: சமாஜவாதி எம்.பி.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீா் மாணவா்களையும் தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தாா். காஷ்மீரில் பஹல்காமில் ஏப்ரல் 22... மேலும் பார்க்க