செய்திகள் :

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஊரில் நடைபெற இருந்த கூட்டத்தில் இவா் கலந்து கொள்ளவில்லை. இதனால் கிராமத்தினா் காசிலிங்கம் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, அவா் காலையில் இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா். அப்போது, ஊரிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் காட்டுப் பகுதியில் அவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்கடிபோலீஸாா் அவரது உடலை கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், காசிலிங்கம் மகன் கண்ணன் (35) சொத்துப் பிரச்னையில் நண்பா்களுடன் சோ்ந்து தந்தையைக் கொலை செய்தது தெரிவந்தது. இதைத் தொடா்ந்து, கண்ணன், ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த அழகு ஞானகுரு (35), விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த குமாரவேலு (30), மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சோ்ந்த ராம்குமாா் (37) ஆகிய 4 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க

ராமேசுவரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு

ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள், மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தன... மேலும் பார்க்க