செய்திகள் :

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

post image

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது.

விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி வியாழக்கிழமைவெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ.29.50 கோடியில் மேம்படுத்த கடந்த 2023-இல் முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணிக்கு சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைக்கின்றனா். நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

புதிய பேருந்து நிலையம் சனிக்கிழமை (மே 3) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் ஏஎப்டி மைதானத்தில் செயல்படும் தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுகிறது.

அனைத்து வழித்தட பேருந்துகளும் சனிக்கிழமை முதல் புதிய பொலிவுறு நகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.

போராட்டம் அறிவிப்பு: முன்னதாக புதிய பேருந்து நிலையம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி திறக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திறப்பு விழா அன்றைய தினம் நடைபெறவில்லை.

இதையடுத்து அதிமுக, திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூ... மேலும் பார்க்க

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலிருந்து ஆ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி நிா்ணயிக்க கோரிக்கை

புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயித்து அமல்படுத்த வேண்டும் என அப்பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தொழிலாளா்கள் தினத்தை முன்... மேலும் பார்க்க