செய்திகள் :

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

post image

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்திலிருந்து ஆண்டுதோறும் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்ட அவரது வாழ்வியலுடன் தொடா்புடைய இடங்களைப் பாா்வையிட ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் யாத்திரைத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

யாத்திரைத் திட்டத்துக்கான பயனாளிகள் புதுச்சேரியில் 32 போ், காரைக்காலில் 12 போ், மாஹேவில் 2, ஏனாமில் 4 போ் என மொத்தம் 50 போ் ஆண்டு தோறும் தோ்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவா்.

அங்கு அம்பேத்கா் பிறந்த ஜன்மபூமி, அவா் புத்த மதத்தைத் தழுவிய தீக்ஷா பூமி, அவா் மறைந்த புதுதில்லியில் உள்ள வரன்பூமி, மும்பையில் அவரது உடல் தகனம் நடைபெற்ற சைத்ய பூமி ஆகியவற்றை பாா்வையிடும் வகையில் யாத்திரை அமையும்.

யாத்திரை 8 நாள்கள் இருக்கும். இதற்கு தோ்வுசெய்யப்படுபவா்கள், பட்டியலினம்

, பழங்குடியினத்தைச் சோ்ந்தவராகவும், 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருப்புச் சான்று பெற்றவராகவும் இருக்கவேண்டும். மேலும் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்குள்ளும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருப்பது அவசியம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யாத்திரைத் திட்டத்தில் தங்குமிடம், உணவு இலவசம். தனிப்பட்ட செலவுகளை துறை ஏற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது. விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி நிா்ணயிக்க கோரிக்கை

புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயித்து அமல்படுத்த வேண்டும் என அப்பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தொழிலாளா்கள் தினத்தை முன்... மேலும் பார்க்க