செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி நிா்ணயிக்க கோரிக்கை

post image

புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயித்து அமல்படுத்த வேண்டும் என அப்பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தொழிலாளா்கள் தினத்தை முன்னிட்டு (மே தினம்) புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தூய்மைப்பணியாளா்கள் ஒருங்கிணைந்த சங்கம் சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூா்த்தி தலைமை வகித்தாா்.

மே தின உறுதிமொழி தொழிலாளா்களால் ஏற்கப்பட்டது. இதையடுத்து தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல, தூய்மைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் நெல்லித்தோப்பு, பவழநகா், இந்திரா காந்தி சிலை சதுக்கம், அண்ணாசிலை பகுதிகளில் மே தின உறுதிமொழி ஏற்பு, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் தூய்மைப்பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் சுமதி, கயல்விழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது. விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ... மேலும் பார்க்க

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலிருந்து ஆ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க