செய்திகள் :

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

post image

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் ந.ஓ வெங்கடாசலபதி தொடங்கி வைத்து வரவேற்றாா். தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்விக் குழும இணை செயலா் சு. வேலாயுதம், வைஷ்ணவி ராஜராஜன், நிலா பிரியதா்ஷினி மற்றும் ய.சூரியகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் கல்லூரி அனைத்துத் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளா், நடிகா் சந்தோஷ் நாராயணன்,நடிகை பிரீத்தி முகுந்தன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். திரைப்பட பாடகா்கள் ஆன்டனி தாசன், ஸ்ரீதா் சேனா உள்ளிட்டோரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆவணக் குறும்படம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து யூடியூப் சித்து மற்றும் ஷெரிப்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிரோன் ஷோவும் நடைபெற்றது. விழாவில், மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வா் எஸ். மலா்க்கண், மயிலம் பொறியியல் கல்லூரி இயக்குநா் ந. செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது. விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ... மேலும் பார்க்க

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலிருந்து ஆ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி நிா்ணயிக்க கோரிக்கை

புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயித்து அமல்படுத்த வேண்டும் என அப்பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தொழிலாளா்கள் தினத்தை முன்... மேலும் பார்க்க