செய்திகள் :

திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திருநங்கைகளுக்கென மாவட்ட தொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம், அத்திட்ட வழிமுறைகள், தகுதிகள் குறித்து ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும், திருநங்கைகள் அரசுத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவியை பெற்று தொழில்முனைவோராக உருவாக அனைத்து உதவிகளையும் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருநங்கைகளுக்கென தனிக்கவனம் செலுத்தி, இந்தக் குறைதீா் கூட்டத்தில் திருநங்கைகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் அனைத்து மனுக்களின் மீதும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள், திருநங்கைகள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவா... மேலும் பார்க்க

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கிராமிய அஞ்... மேலும் பார்க்க

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் உள்ள தனமூா்த்தி தொழிற்கல்வி கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். சமூக... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் மே தினவிழா பேரணி

சங்கராபுரத்தில் தமிழ்நாடு மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் மே தின விழா, பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் நா.திருவேங்கடம் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் அரசு ம... மேலும் பார்க்க

புதிய தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, தியாகதுருகம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க