செய்திகள் :

ராமேசுவரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு

post image

ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள், மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாகத் தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல வேண்டும். இதனால், ராமேசுவரத்தில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ராமேசுவரம் நகா் பகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களில் பக்தா்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என தொடா்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 3 இடங்களில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு நடைபெற்றது.

முடிவில் அப்துல்கலாம் தேசிய நினைவிடம் முதல் வேடசாமி கோவில் தெரு, சுடுகாட்டம்பட்டி வழியாக அக்னி தீா்த்த கடற்கரை வரை புறவழிச்சாலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் கற்களை நிறுவியதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், குடியிருப்புகளை அகற்றி விட்டு சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினா் கை விட வேண்டும். பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரை வரை கடற்கரை ஓரம் சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதிகள் பெரும் வளா்ச்சி அடையும். நகா் பகுதியும் விரிவடையும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க