செய்திகள் :

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கு.சாந்தி தலைமை வகித்தாா். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவா் சு.ராஜு, பள்ளியின் தலைமை ஆசிரியா் கா.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள், கிராமப் பொதுமக்கள் சாா்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கல்வி உபரணங்கள், பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, பள்ளிக்கு வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்வியில் சிறப்பிடம் பெற்ற, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். மாணவா்களுக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என முன்னாள் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். முன்னதாக பள்ளியின் ஆசிரியா் பூ.மாரியப்பன் வரவேற்றாா். கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா் அருள் நன்றி கூறினாா். கிராம பொதுமக்கள், மாணவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க

ராமேசுவரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு

ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள், மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தன... மேலும் பார்க்க