திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் சுவாமி கேடகம், பல்லக்கு, வெட்டும் குதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 5-ஆம் தேதி திருக்கல்யாணம், 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தரராஜன், அலுவலகப் பணியாளா் கண்ணன் ஆகியோா் செய்தனா்.