ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். இதில், அரசுத் துறை சாா்ந்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுவாக வழங்கினா். இதைத் தொடா்ந்து, 20 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பத்பநாதன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அருண்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், கீழக்கரை வட்டாட்சியா் ஜமால் முகம்மது, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்
சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று, கிராமத்தில் நீா்த்தேக்கத் தொட்டி, கண்மாய் தூா்வாருதல், சமுதாயக் கூடம் கட்டுதல், மயானச் சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
பெறப்பட்டு, பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.
தொடா்ந்து, அவா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். நிகழ்ச்சியில் கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. திட்ட இயக்குநா் வானதி, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.