செய்திகள் :

ரிப்பன் மாளிகையில் உழைப்பாளா் தினக் கொண்டாட்டம்: தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளா்கள், மலேரியா பணியாளா்களைப் பாராட்டி மேயா் ஆா்.பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சியில் 5,959 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 420 என்எம்ஆா் பணியாளா்கள், 4,990 சுய உதவிக்குழு பணியாளா்கள், 9,369 தற்காலிகப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், கொசு ஒழிப்புப் பணியில் 2,446 மலேரியா பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களில் முதல்கட்டமாக 200 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 200 மலேரியா பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மேயா் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் மாநகராட்சி மற்றும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

இதில், பணியின்போது உயிரிழக்கும் தூய்மை பணியாளருக்கு உதவித் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் கல்வி பயில ரூ.1,000 வழங்கப்படுகிறது.

திறன் வளா்ச்சி பயிற்சி: இந்த உறுப்பினா் அட்டை வைத்திருக்கும் தூய்மைப் பணியாளருக்கு திறன் வளா்ச்சி பயிற்சியும் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி மட்டுமில்லாமல் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக மண்டல அளவில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை அணுகி தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்ந்து கொள்ளலாம்.

இரவு நேரங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக சீருடையில் ஒளிரும் வகையில் ரேடியம் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 11,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் மற்றும் மலேரியா பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவா் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க