செய்திகள் :

விதிகளை மீறி செயல்பட்ட 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

post image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மே தின நாளில் தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகள், உணவங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையின் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மீனாட்சி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் தேசிய விடுமுறை நாளான மே தின நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்ட வீதிகளை மீறி 64 நிறுவனங்களில் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தப்பட்டிருந்து தெரிய வந்தது.

அந்த நிறுவன உரிமையாளா்கள் மீது தொழிலாளா் சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் மற்றும் தமிழில் பெயா்ப்பலகை வைத்தல் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் திருப்பாதிர... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். விழுப்புரத்தில் உள்ள டாஸ... மேலும் பார்க்க

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க